
Tamil Poem – Karam Koduppom
ஆராரோ பாடிடத்தான் யாருமில்ல !
யாரோட பிள்ளைன்னு நானும் சொல்ல !
தொப்புள்கொடி பந்தமுன்னு யாரச்சொல்ல !
குப்பத்தொட்டி பெற்றெடுத்த பச்சபுள்ள !
சொந்தம் பந்தமேதுமில்ல!
சொல்லிகத்தான் நாதியில்ல!
காட்டியல யாருமில்ல!
கட்டிக்கத்தான் துணியுமில்ல !
அவ பத்தினியா இருந்திருந்தா ?
நா பட்டினியா கிடப்பேனா ?
அவ உத்தமியா இருந்திருந்தா ?
ஊரும் என்ன ஏசிடுமா?
பத்து மாசம் சுமந்தவதான்
பாரமுன்னு நெனச்சாளோ?
பாசத்த மறந்து ஏனோ
வீதியிலே வெதச்சாளோ?
படுக்கைக்கு பணயம் வச்சு
பாவி என்ன பெத்தாளோ?
பெத்ததுமே கொல்லமா
நித்தம் என்ன கொன்னாளே !
நடுத்தெரு நாய்கூட
தன் தாய்கூட சுத்துதடா
நாதியற்று வீதியிலே
நிற்கதியா நிக்கிறேனே !
கையேந்தி நிக்கைலே
பிச்சை என் பேராச்சே !
சோறு போட யாருமில்ல
வேரறுந்து நிக்கிறேனே !
ஒத்த வேள சோத்துக்தான்
செத்து செத்து பிழைக்குறேனே !
தாயும் என்ன விட்டுப் புட்டா
தாய் மண்ணும் சுட்டதடா
எச்சமா பொறந்ததால
துச்சமா நினச்ச சொந்தம்
மிச்ச மீதி கூட இந்த
பச்சமண்ணு பாக்கலையே !
தோழனாய் விதி மாற
வீதி என் வீடாச்சே
நான் செய்த பாவமென்ன ?
விதியோடு விளையாட
பிள்ளைக்காக ஏங்கும் தாயே எனை
பிள்ளையாக ஏற்பாயோ ? பெயர் சூட்டி அழைப்பாயோ !
தாயென்று உனையழைக்க தத்தெடுத்து வளர்ப்பாயோ !
உறவென்று உனைக்காட்ட வரமொன்று தருவாயோ !
Written by,
Alagarsamy. S (Tendering Dept.)
சிறப்பான கவிதை
Thanks for the insthgi. It brings light into the dark!